×

தென்காசி, செங்கோட்டை சுரண்டையில் நாளை மின்தடை

தென்காசி, ஜன. 3: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை பகுதியில் நாளை (4ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தென்காசி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி, செங்கோட்டை மற்றும் சுரண்டை துணை மின் நிலையங்களில் நாளை(4ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி சனிக்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டினம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, மேக்கரை, பூலான்குடியிருப்பு, புதூர், கட்டளை குடியிருப்பு மற்றும் சுரண்டை, இடையர்தவணை, குலையநேரி, ரெட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வீ.கே.புதூர், வாடியூர், கழுநீர்குளம், ஆனைகுளம், கரையாலனூர், அச்சங்குட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு கூறியுள்ளார்.

வி.கே.புரத்தில் இன்று  மின்தடை :வி.கே.புரம் துணை மின்நிலையத்தில், இன்று மாதாந்திர  பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை வி.கே.புரம்,  ஆழ்வார்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர், ஆம்பூர், பாப்பாங்குளம்,  பாபநாசம், காரையாறு, சேர்வலாறு, சிவந்திபுரம், அடையக்கருங்குளம்,  ஏர்மாள்புரம், மணிமுத்தாறு, மாஞ்சோலை, சிங்கம்பட்டி, வைராவிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Tags : Tenkasi ,Red Fort ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...