×

பாபநாசம் தலையணையில் தொழிலதிபர் தற்கொலை

வி.கே.புரம், ஜன. 3: பாபநாசம் தலையணை அருகே ஆண் உடல் கிடப்பதாக வி.கே.புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்ஐக்கள் மணிகண்டன், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு விஷ பாட்டிலுடன் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது சட்டை பையில் சங்கரன்கோவிலில் இருந்து பஸ்சில் வந்ததற்கான டிக்கெட்டும் இருந்தது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அதனை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து சங்கரன்கோவில் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், கரிவலம்வந்தநல்லூர் அருகே சுப்புலாபுரத்தில் பாடலிங்கம்   என்பவரை கடந்த 23ம் தேதி முதல் காணவில்லை என தெரியவந்தது. உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாடலிங்கத்தின் உறவினர்கள், உடலை பார்த்து இறந்தது பாடலிங்கம்தான் என உறுதிசெய்தனர். பாடலிங்கம் சொந்தமாக தறி தொழிற்கூடம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு சிதம்பரவடிவு என்ற மனைவியும், ராஜலெட்சுமி (23) என்ற மகளும், ஜெய்கணேஷ் (17) என்ற மகனும் உள்ளனர். தொழில் நஷ்டம் காரணமாக பாடலிங்கம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : businessman ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை