×

பைக் விபத்தில் வாலிபர் பலி

கடையநல்லூர், ஜன. 3: கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்குமலம்பாட்டை தெருவை சேர்ந்த அப்துல்கபூர் (45). இவர், மதுரை திருமங்கலத்தில் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை தயார் செய்து மொத்தமாக விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் கடையநல்லூருக்கு வந்தார். மாலையில் தனது பைக்கில் அப்துல்கபூர், அவரது சகோதாரர் மகன் அர்சத் (7) ஆகிய இருவரும் தென்காசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். இடைகாலை அடுத்த நயினாரகரம் வளைவில் எதிரே வந்த பைக்கும் அப்துல்கபூர் பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அப்துல்கபூர் மற்றும் அர்சத் இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்துல்கபூர் சிகிச்சை பலனின்றி இரவில் பலியானார். காயமடைந்த அர்சத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான அப்துல்கபூருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Tags : bike accident ,
× RELATED (தி.மலை) மரத்தில் பைக் மோதி விவசாயி பலி