×

முதலியார்பட்டியில் மலைப்பாம்பு சிக்கியது

கடையம், ஜன. 3: கடையம் அருகே முதலியார்பட்டியில் குடியிருப்புக்குள் நுழைய முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது. கடையம் -அம்பை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முதலியார்பட்டி சாலையில் நேற்றிரவு மலைப்பாம்பு, குடியிருப்பை நோக்கி ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள், குடியிருப்புக்குள் புகாமல் பாம்பை தடுத்தனர். மேலும் கடையம் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் உத்தரவுப்படி வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், அப்பகுதியில் பதுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து கடையம் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Tags : pitcher ,bar ,
× RELATED உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவராக...