கடையநல்லூர், ஜன. 3: மேலக்கடையநல்லூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேவேந்திர குல வேளாளர் சமுதாய நலக்கூடத்தில் சமையல் கூடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர் செல்லத்துரை வரவேற்றார். ராமச்சந்திரன், மாரிராஜ், மயில்சாமி, செந்தூர்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், துணை செயலாளர் அப்துல்வகாப், நகர தலைவர் செய்யது மசூது, துணை செயலாளர் அயூப்கான், தொகுதி அமைப்பாளர் ஹைதர்அலி, தென்மண்டல இளைஞரணி அமைப்பாளர் பாட்டப்பத்து கடாபி, சாகுல்ஹமீது, திமுக வார்டு செயலாளர்கள் மணி, காளிமுத்து, புதிய தமிழகம் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.