×

பென்னாகரம் செல்லும் வழியில் தார்சாலை பணி தீவிரம்

தர்மபுரி, ஜன.3: தர்மபுரி அருகே பென்னாகரம் செல்லும் வழியில் சாலை விரிவாக்க பணி முடிந்து, தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் திருப்பத்தூர் மெயின் ரோட்டில் ஆட்டுக்காரம்பட்டி முதல் மதிகோன்பாளையம் வரையும், மதிகோன்பாளையம் முதல் நாய்க்கன்கொட்டாய் வரையுமாக சுமார் ₹42 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள், கடந்த 4 மாதமாக நடந்து வருகிறது.  இதில், தர்மபுரி டவுன் குமாரசாமிபேட்டை மேம்பாலம் முதல் ₹16 கோடியே 23 லட்சத்திலும், மதிகோன்பாளையம் முதல் நாய்க்கன் கொட்டாய் வரை ₹26 கோடியிலும் சாலை விரிவாக்க பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையொட்டி ஆட்டுக்காரம்பட்டி முதல் நாய்க்கன்கொட்டாய் வரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புளியமரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்நிலையில் தற்போது பென்னாகரம் செல்லும் மெயின் ரோட்டில் இறுதி கட்ட பணிகளாக தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags : Darsala ,Pennagaram ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...