×

வாக்கு எண்ணிக்கையையொட்டி போச்சம்பள்ளியில் போக்குவரத்து மாற்றம்

போச்சம்பள்ளி, ஜன.3:  உள்ளாட்சி தேர்தலையொட்டி போச்சம்பள்ளியில் போக்குவரத்து மாற்றப்பட்டது. போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. இதற்காக நேற்று கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டது. பள்ளிகள் விடுமுறை என்பதால், கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் பிரதான சாலையில் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே போலீசார் அனுமதித்தனர். மேலும், வாக்கு எண்ணும் பணி நடைபெற்றதால் முகவர்கள், போலீசார் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினரின் வாகனங்கள் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

Tags : Traffic change ,
× RELATED பிரதமர் மோடி வருகை!: சென்னையில்...