×

ஏற்காடு செம்மநத்தம் பஞ். தலைவர் வெற்றியை அறிவிப்பதில் குளறுபடி

சேலம், ஜன.3: ஏற்காடு செம்மநத்தம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை அறிவிப்பில் தேர்தல் அதிகாரிகள் குளறுபடி ஏற்படுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஏற்காட்டில் செம்மநத்தம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். செம்மநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் முதலில் சுயேட்சை வேட்பாளர் சரோஜா 628 வாக்குகளும், திமுகவை சேர்ந்த ரஞ்சிதம் 616 வாக்குகளும் பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.வாக்கு எண்ணிக்கையில் தவறு நடந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று வேட்பாளர் ரஞ்சிதம் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டார். இதையடுத்து மீண்டும் ஒருமுறை வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் ரஞ்சிதம் 628 வாக்கும், சரோஜா 616 வாக்குகளும் பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதன் பின்னர் தேர்தல் அதிகாரிகள் வேட்பாளர் ரஞ்சிதத்திற்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினர். தேர்தல் அதிகாரிகளின்  குளறுபடியால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Yercaud ,
× RELATED ஏற்காட்டில் பரபரப்பு போலி சான்றிதழ்...