×

திமுக வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் வழங்காததால் மறியல்

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.3: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் தாமதம் செய்ததால், ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில் உள்ளாட்சி தேர்தல்லுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் 19ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், 14ஒன்றிய கவுன்சிலர்கள், 500க்கும் மேற்பட்ட கிராம வார்டு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பெரும்பான்மையாக, ஊராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு திமுகவினர் வெற்றி பெற்றனர். ஆனால், வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அதிகாரிகள் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.இந்நிலையில், திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ஜான்பாபு வெற்றி பெற்றதாக, அதிகாரிகள் அறிவித்தனர். சான்றிதழ் பெறுவதற்காக காத்திருந்த ஜான்பாபு, அதிகாரிகளிடம் சான்றிதழ் கேட்டபோது, சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த, வேட்பாளரின் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர், அவரது சொந்த ஊரான பி.பள்ளிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர் ஜான்பாபுவுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.

Tags : candidate ,DMK ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்