×

நல்லகுட்லஅள்ளியில் பயன்பாட்டிற்கு வராத கிராம சேவை மையம்

கடத்தூர், ஜன.3: கடத்தூர் அருகே, 5ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத கிராம சேவை மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடத்தூர் அடுத்த நல்லகுட்லஅள்ளி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், ₹13.20 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடித்த பின்னும், இந்த சேவை மையம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால், முதியோர் உதவித்தொகை, இருப்பிட சான்றிதழ், பட்டா மாற்றம் உள்ளிட்ட சான்றுகள் பெறுவதற்காக, 5கி.மீ தொலைவில் உள்ள கடத்தூர் பகுதிக்கும், 40கி.மீ தொலைவில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கும் மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிராம சேவை மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Village Service Center ,Nallakudulla ,
× RELATED நகராட்சி ஆணையர் தகவல் உப்பூரில்...