×

புத்தாண்டையொட்டி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை

தர்மபுரி, ஜன.3: ஆங்கில புத்தாண்டையொட்டி உலக அமைதி வேண்டி உலக சேவா சங்கம் சார்பில், தர்மபுரியில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தர்மபுரி சத்திரம் தெருவில் உலக சேவா சங்கம் சார்பில், அறிவுத்திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலக அமைதி வேண்டிய சிறப்பு தவம் மற்றும் பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான யோகா பேராசிரியர்கள், யோகா பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். மழை வேண்டியும், மழையால் ஏரி, குளம் நிரம்பி வழிய வேண்டியும், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் யோகா பேராசிரியர்கள் சந்திரா, தண்டவேல், சுப்பிரமணியம், வேதாபுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தர்மபுரி பாரதிபுரம் மனவளக்கலை மன்றத்தில், பேராசிரியர் வெங்கடேசன் தலைமையில் சிறப்பு தவம் நடந்தது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா