×

தர்மபுரி மையத்தில் வாக்கு எண்ணிக்கை தாமதம் வேட்பாளர்கள் வாக்குவாதம்

தர்மபுரி, ஜன.3: தர்மபுரி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க தாமதமானதால், வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மற்றும் தர்மபுரி ஒன்றியத்திற்கு, தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. காலை 11 மணிவரை வாக்கு எண்ணிக்கை தாமதமாகிக் கொண்டே வந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் காத்திருந்த வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை 11 மணி வரை  துவங்காததால் வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகளிடம் எப்போது வாக்கு எண்ணிக்கை தொடங்குவீர்கள் என கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து நல்லம்பள்ளி ஒன்றியம் எச்சனஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆறுமுகம் கூறுகையில், ‘தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், வாக்கு எண்ணும் பணி காலை 11 மணிவரை துவங்கப்படவில்லை.  வாக்கு எண்ணும் கீழ்நிலை ஊழியர்கள், தங்களுக்கு உணவளிக்கவில்லை என மேலதிகாரிகளை குறை கூறியுள்ளது, அதிகாரிகளின் மெத்தன போக்கை காட்டுகிறது. எனவே, உடனடியாக வாக்கு எண்ணிக்கையை, தொடங்கி  தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்,’ என்றார்.

Tags : delay ,center ,Dharmapuri ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்