திருமங்கலத்தில் பிகேஎன் பள்ளி முன்பு அதிமுக நிர்வாகிகள் நகர செயலாளர் விஜயன் தலைமையில் நிர்வாகிகள் நின்றனர். அப்போது போலீசார் ஏன், எதற்கு இங்கு நிற்கிறீர்கள் என கேட்டனர். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் அடித்ததில் அதிமுக தொண்டரின் மண்டை உடைந்தது. இதையடுத்து அதிமுகவினர், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்து அதிமுகவினரை அனுப்பி வைத்தனர்.