×

பழநியில்  ரமணர் ஜெயந்தி விழா


பழநி, ஜன. 3: பழநி புறநகர், நேதாஜி நகரில் உள்ள மெய்த்தவ பொற்சபையில்  ரமணரின் 140வது ஜெயந்தி விழா நடந்தது. ரமணமந்திர தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். சபை நிர்வாகி காளிமுத்து வரவேற்றுப் பேசினார். ஊட்டி சற்குரு ஜெயபிரகாச சுவாமிகள், சவுந்தரம் ராஜகோபால் அம்மாள், செயலர் நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெய்த்தவ அடிகள் ரமணரின் தத்துவங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். திண்டுக்கல் ராமகிருஷ்ண ஆசிரம நிர்வாகி நித்ய சத்வானந்தா சுவாமிகள் ரமணரின் உபதேசங்கள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக அட்சரமணமாலை பாராயணம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு  ரமணரின் அட்சரமணமாலை புத்தகம் மற்றும் ரமணரின் புகைப்படங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

Tags :  Ramanar Jayanti Festival ,Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்