×

ஓட்டு வித்தியாசத்தில் ஊராட்சித்தலைவர் பதவியை வென்ற திமுக

பழநி, ஜன. 3: பழநி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பதவியை 2 ஓட்டு வித்தியாசத்தில் திமுகவைச் சேர்ந்தவர் வென்றார். பழநி ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் நடந்தன. 1191 வாக்குகள் கொண்ட பழநி அருகே கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த நகாராஜ் என்பவர் போட்டியிட்டார். இதில் முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் முத்துச்சாமி 445 வாக்குகள் பெற்றார். நாகராஜ் 2 வாக்குகள் அதிகம் பெற்று 447 வாக்குகளில் வெற்றி பெற்றார். 2 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்ததால் மீண்டும் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. அதிலும் நாகராஜ் 2 வாக்குகள் கூடுதலாக பெற்றது உறுதியானதால் வெற்றி உறுதி செய்யப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் வெற்றிக்கான சான்றிதழை நாகராஜிடம் வழங்கினார்.

Tags : DMK ,vote ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...