×

தாந்தோணிமலை அம்பேத்கர் நகர் பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குளம் போல் தண்ணீர் தேக்கம்

கரூர், ஜன. 3: கரூர் தாந்தோணிமலை அம்பேத்கர் நகர்ப்பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு
குளம் போல தேங்கி
யுள்ளது குறித்து பார்வையிட்டு சீரமைக்க வேண்
டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பிரதான சாலையில் இருந்து முத்துலாடம்பட்டி செல்லும் சாலையோரம் அம்பேத்கர் நகர்ப்பகுதி உள்ளது. ஏராளமான குடியிருப்புகள் இந்த பகுதியில் அமைந்துள்ளன.கடந்த சில நாட்களாக அம்பேத்கர் நகர்ச்சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்று அருகில் குளம் போல தேங்கியுள்ளது.நல்ல நீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தி காரணமாகவும் பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளம் போல தேங்கியுள்ளதை சரி செய்யும் வகையிலான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : pond ,Ambedkar Nagar ,Thanthonimalai ,area ,
× RELATED உ.பி.யில் திருமண ஊர்வலத்திற்காக காரை...