×

மயிலாடுதுறையில் மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு வாக்குவாதம்

மயிலாடுதுறை, ஜன.3:மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் மறு வாக்குஎண்ணிக்கை கேட்டு வாக்குவாதம் செய்ததால் அதிமுகவினர் மீது திமுகவினர் புகார் மனு கொடுத்தனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக, திமுக, அமமுக சார்பில் 3 பேர் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளர் சுகந்தியை விட திமுக வேட்பாளர் மும்தாஜ் 400 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதற்கிடையில் அதிமுக வேட்பாளர் வாக்கு எண்ணிக்கையிலும், வாக்கு பதிவிலும் குளறுபடி நடந்துள்ளதால் மறுவாக்குப்பதிவு வேண்டி மனு அளித்தார். மறுவாக்கு பதிவு செய்யக்கூடாது என்று திமுக ஒன்றிய செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அனைவரும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சிறிது நேரத்தில் திமுக வேட்பாளர் மும்தாஜ்பேகத்திற்கு வெற்றிபெற்றதற்கான சான்றிதழ் வாங்கியதை வெளியில் வந்த திமுக வேட்பாளர் மும்தாஜிடமிருந்த சான்றிதழ் மர்ம நபரால் பிடுங்கப்பட்டது.இதனால் திமுக, அதிமுக ஒன்றிய செயலாளர் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags : Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...