×

நாகையில் குடிசை வீடு தீக்கிரை

நாகை, ஜன.3: நாகையில் குடிசைவீட்டில் ஏற்பட்ட தீயை இரண்டு தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.நாகை காடம்பாடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி. இவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் பகுருதீன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியேறினார். நேற்று பகுருதீன் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த கட்டில் பீரோ உள்ளிட்டவைகள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Naga ,
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா