×

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொளி மூலம் இன்று குறைகேட்பு

காரைக்கால், ஜன.3: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி காணொளி மூலம் மக்கள் குறைகளை கேட்கவுள்ளதால், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவித்துள்ளார்.இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தினசரி மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதுச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டுவருகிறார். அதேபோல், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொளி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. இன்று (3-1-2020) இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 முதல் மாலை 3 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில், புகார்களை எழுத்து வடிவில் கொண்டுவந்து முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Governor ,Puducherry ,
× RELATED தெலங்கானா பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்