×

தேனி ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணிக்கு வராதவர்களுக்கு ேநாட்டீஸ்

தேனி. ஜன.3: தேனி ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணிக்கு வராத ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. தேனி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 12 ஒன்றிய கவுன்சிலர்கள், 18 ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான வாக்கு எண்ணும் பணி தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. வாக்கு எண்ணும் பணிக்காக சுமார் 250 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் நேற்று 12 பேர் பணிக்கு வரவில்லை. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் பிரிவு முடிவு செய்துள்ளது.

Tags : Nationals ,Theni Panchayat Union ,
× RELATED தேனி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்