×

திருக்காட்டுப்பள்ளி காவிரி- குடமுருட்டி பாலம் அருகில் பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 3: திருக்காட்டுப்பள்ளி குடமுருட்டி பாலம் அருகில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.150 ஆண்டுகளுக்கு முன்பே திருக்காட்டுப்பள்ளியில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து ஆறு காவிரி, குடமுருட்டி என்று இரண்டாக பிரிந்து செல்கிறது. பழமையான இப்பாலத்தின் வழியாக திருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருவையாறு, பூண்டிமாதா கோயில், கல்லணை, கும்பகோணம், லால்குடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும், அப்பகுதிகளில்இருந்து வரும் வாகனங்கள் திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி, தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளுக்கும் சென்று வந்தன.

இதனால் பாலம் மேலும் பலவீமடையும் என்று போக்குவரத்துக்கு தனியாக ஒரு பாலம் கட்டி இப்பழமையான பாலத்தில் கனரக வாகனங்கள், பேருந்துகள் செல்வது தடை செய்யப்பட்டது. தற்போது பாலத்தின் குடமுருட்டி ஆற்று பாலம் அருகில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பல நேரங்களில் தடுமாறி விழுகின்றனர். மேலும் பாலத்தின் மேல் உள்ள தார்ச்சாலையும் பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. எனவே இதை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirukkattupalli ,bridge ,Cauvery - Kudamurutti ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு