×

திமுக வார்டு உறுப்பினரின் வெற்றியை அறிவிக்க 5 மணி நேரம் தாமதம்

பட்டுக்கோட்டை, ஜன. 3: பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் திமுக வார்டு உறுப்பினர் வெற்றி பெற்றதை அறிவிப்பதற்கு அதிகாரிகள் 5 மணி நேரம் தாமதப்படுத்தினர். பட்டுக்கோட்டை ஒன்றியம் 3வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக , திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் களத்தில் போட்டியிட்டனர். இவர்களில் திமுக வேட்பாளர் முருகானந்தம் நிருபர்களிடம் கூறுகையில், திமுக வேட்பாளரான நான் அதிமுக வேட்பாளர் அன்புசெழியனை 867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். மதியம் 2 மணியளவில் என்னுடைய வார்டு எண்ணும் பணி முடிந்த பிறகும் இரவு 7 மணி வரை நான் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவிக்க மறுத்தனர். இதற்கு காரணம் ஆளும்கட்சிக்காரர்கள் தான் என்றார். இதைதொடர்ந்து 5 மணி நேரத்திற்கு பிறகு இரவு 7 மணிக்கு அவருடைய வெற்றியை தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.

Tags : victory ,DMK ,ward member ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...