×

திருக்கருக்காவூரில் கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா?

பாபநாசம், ஜன. 3: திருக்கருக்காவூரில் கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்கு செல்லும் சாலை விரைந்து சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் பாபநாசத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் திருக்கருக்காவூர் உள்ளது. இந்த ஊரிலுள்ள கர்ப்பரட்சாம்பிகை கோயில்பிள்ளை வரம் அருளும் ஆலயம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கூட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த கோயிலுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையில் கால்நடை மருந்தகம், தபால் நிலையம், ரேஷன் கடை உள்ளிட்டவை இயங்குகின்றன. எனவே சேதமடைந்த சாலையில் வாகனங்களில் செல்லவும், நடந்து செல்லவும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Garbarakshampagi ,Thirukarukavur ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி