×

திருமக்கோட்டை அருகே வயிற்று வலியால் முதியவர் தற்கொலை

மன்னார்குடி, ஜன.3: திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே மேலமறவாகாடுகிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (73) . விவசாய கூலி தொழிலாளி.
இவரது மனைவி லலிதா (63. இவர்களுக்கு சித்ரவேல் என்ற மகனும், மாரியம்மாள் என்ற மகளும் உள்ளனர். மாரியம்மாள் ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவிந்தராஜ் தனது மகள் மாரியம்மாள் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் திருமக்கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட பாலையூர் வாய்க்கால் அருகே உள்ள ஒரு தேக்கு மரத்தில் முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கியதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் திருமக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருமக்கோட்டை எஸ்ஐ முத்து காமாட்சி மற்றும் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சித்ரவேல் நேரில் சென்று தூக்கில் தொங்கியது தனது தந்தை கோவிந்தராஜ் தான் என்பதை அடையாளம் காட்டினார். பின்னர் அவர் திருமக்கோட்டை போலீசில் அளித்த புகாரில், தனது தந்தை வயிற்று வலியால் அவதி பட்டு வந்ததாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tirumakottai ,
× RELATED திருமக்கோட்டை அருகே பைக் மீது கார் மோதல்: விவசாயி பலி