×

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜமாஅத் முஸ்லிம் அமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன.3: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இன்று ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அனைத்து ஜமாஅத் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ரயிலடி பள்ளி வாசலில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து இன்று (3ம் தேதி) 4 மணிக்கு திருத்துறைப்பூண்டி போஸ்ட் ஆபிஸ் அருகில் ஆர்பாட்டம் நடத்துவது என்றும், இதில் அனைத்து முஸ்லிம் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து பொதுநலசங்கள், ஆண்கள், பெண்கள் கலந்து கொள்வது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Demonstration ,Jamaat Muslim Organization ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்