×

பூசலாங்குடி ஊராட்சி தலைவராக பட்டதாரி இளம்பெண் தேர்வு

திருத்துறைப்பூண்டி, ஜன.3: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சி தலைவராக கல்லூரி பிபிஏ பட்டதாரி பெண் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சியை சேர்ந்தவர் ஆர். சுபிதா (22) இவர் திருவாரூர் திருவிக கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பை கடந்த 2017-ல் முடித்தவர். இவர் பூசலாங்குடி ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக கூட்டணியில் இத்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  வெற்றி குறித்து கேட்டபோது சுபிதா தெரிவித்ததாவது: தேர்தலில் வெற்றிபெற்று ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது இருந்து வந்தது. அது இன்று நிறைவேறியிருக்கிறது.ஊராட்சிக்கு தேவையான அனைத்து பணிகளையும் பொதுமக்கள் பயன்பெற முழு முயற்சி மேற்கொள்வேன் என்றார்.

Tags : teenagers ,panchayat leader ,
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு