×

வந்தவாசி ஒன்றியத்தில் அதிமுக பிரமுகரின் 2 மனைவிகள் ஊராட்சி தலைவராக தேர்வு

வந்தவாசி, ஜன.3: வந்தவாசி ஒன்றியத்தில் அதிமுக பிரமுகரின் 2 மனைவிகள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தலில் 7 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதம் உள்ள 54 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேர்தல் நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இதில் வழூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் தனசேகரின் முதல் மனைவி செல்வி வழூர்-அகரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 2வது மனைவி காஞ்சனா சாத்தனூர்-கோயில் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் இரண்டு பேரும் வெற்றி பெற்றனர்.

Tags : wives ,Vandavasi Union ,Panchayat ,
× RELATED லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100...