×

சாலையோர ஆக்கிரமிப்புகள் 7ம் தேதிக்குள் அகற்ற அவகாசம் தவறினால் கடும் நடவடிக்கை என டிஎஸ்பி எச்சரிக்கை அரக்கோணம் சப்-டிவிஷனில்

அரக்கோணம், ஜன.3: அரக்கோணம் சப்-டிவிஷனில் சாலையோர ஆக்கிரமிப்புகள் வரும் 7ம் தேதிக்குள் அகற்ற வேண்டும், அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎஸ்பி மனோகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சப்-டிவிஷனில் புத்தாண்டு தினத்தையொட்டி டிஎஸ்பி மனோகரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் அரக்கோணம் சப்-டிவிஷனில் கடந்த 2019ம் ஆண்டில் நடந்த குற்றச்செயல்கள் குறித்து டிஎஸ்பி மனோகரன் கூறியதாவது: அரக்கோணம் சப்-டிவிஷனில் கொலை, கொள்ளை, மணல் கடத்தல், வழிப்பறி, ரவுடிசம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 21 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரவுடிசம், கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரக்கோணம் நகரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை வரும் ஜனவரி 7ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பாளர்கள், அவர்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வருவாய்த்துறையினர் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

Tags :
× RELATED விருப்பமுள்ள சிறைவாசிகளின் விவரங்கள்...