×

நாகர்கோவில் பகுதியில் பிஎஸ்என்எல் லேன்ட்லைன் மறு இணைப்பு மேளா

நாகர்கோவில், ஜன.3: நாகர்கோவில் பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் சஜிகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பி.எஸ்.என்.எல் தரைவழி இணைப்புகளில் இருந்து இரவு 10:30 மணி முதல் காலை 6 மணி வரையிலும் மேலும் ஞாயிற்று கிழமைகளில் 24 மணி நேரமும் இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் எந்த ஒரு நெட்வொர்க்கிற்கும் அளவில்லா அழைப்புகள் பேசும் வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஏற்கனவே லேன்ட் லைன் இணைப்புகளைப் பெற்று தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள கோட்டார், வடசேரி மற்றும் ராமன்புதூர் ஆகிய பகுதியை உள்ளடக்கிய நாகர்கோவில் நகர் பகுதிகளை சார்ந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளும் வகையில் பி.எஸ்.என்.எல் நிறுவன நாகர்கோவில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு மறு இணைப்பு மேளாக்களை நடத்த உள்ளது.

கோட்டார் தொலைபேசி நிலையத்தில் இன்றும்(3ம் தேதி), கே.பி ரோடு வாடிக்கையாளர் சேவை மையத்தில் நாளையும் (4ம் தேதி), வடசேரி தொலைபேசி நிலையத்தில் 6ம் தேதியும், ராமன்புதூர் தொலைபேசி நிலையத்தில் 7ம் தேதியும், காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை மறு இணைப்பு மேளா நடக்கிறது. தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு பாக்கிதொகை இருந்தால், பொருத்தமான சலுகை முறையில் தள்ளுபடி பெற்றுக் கொண்டு, மறு இணைப்பு பெறுவதற்கோ, பாக்கி தொகையைச் செலுத்தி கணக்கை முடித்து கொள்வதற்க்கோ இந்த மேளாக்களில் பங்கேற்று பயன்பெறலாம். பாக்கி தொகை தீர்வு செய்யப்படவில்லை எனில் உரிய சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வாடிக்கையாளர்கள் விரும்பும்பட்சத்தில் புதிதாக அறிமுகப்படுத்தபட்டுள்ள லேண்ட்லைன் திட்டம் 129 ல் மறு இணைப்பு பெற்று கொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : BSNL ,area ,Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை