×

மின்தடை

நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, ராமவர்மபுரம் ஆகிய மின்னூட்டியின் மின்பாதையில் இடையூராக உள்ள மரக்கிளைகள் அகற்றும் மற்றும் பராமரிப்பு பணி இன்று(3ம் தேதி) நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பருத்திவிளை, காரவிளை, எள்ளுவிளை, முருங்கவிளை, ராஜாக்கமங்கலம், அளத்தங்கரை, கணபதிபுரம், தெக்குறிச்சி, ஆலங்கோட்டை, கன்னகுறிச்சி, அழிக்கால், பிள்ளைதோப்பு, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம்துறை, தர்மபுரம், ஆடரவிளை, விலத்திவிளை, பூவன்குடியிருப்பு, பழவிளை, புதுகுடியிருப்பு, பூச்சிவிளாகம், கார்த்திகைவடலி, கே.பி.ரோடு, விமல் நகர், ஹனீபா நகர், ஜோ டேனியல் தெரு, பிளசன்ட் நகர், மீனாட்சிபுரம் பிரிவுக்கு உட்பட்ட தளவாய்புரம், சைமன்காலனி, சற்குணவீதி, ஆசாரிபள்ளம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட அருள்நகர், மத்தியாஸ்நகர், டெரிக்ஜங்ஷன், ஆசாரிபள்ளம் பிஷப்ஹவுஸ், ஸ்காட் கல்லூரி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

v இரணியல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிக்கை: பரசேரி மின் விநியோகப்பிரிவு அலுவலக பராமரிப்பு பகுதிக்கு உட்பட்ட ஆளூர் 11 கேவி உயர் அழுத்த மின்பாதையில் அண்ணாநகர் காற்றுதிறப்பானில் ஏறபட்டுள்ள பழுதை சரி செய்யும் பணி இன்று நடக்க இருப்பதால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அண்ணா நகர்,  கிருஷ்ணாபுரம், ஆளூர், செக்காரவிளை, வீராணி, வர்த்தநாடார் குடி, ஐக்கியபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி