×

தோல்வியடைந்ததாக வெளியேறிய வேட்பாளர் வெற்றி பெற்றார்

மார்த்தாண்டம், ஜன.3: புறங்கறை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆத்திவிளை ஊராட்சி 11 வது வார்டுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமுதா போட்டியில் முன்னிலையில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில், தோல்வியடைந்ததாக கருதி அவர் திடீரென்று மையத்தை விட்டு  வெளியேறினார்.  அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜாய், தான் வெற்றிபெற்றதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அமுதா 196 வாக்குடன் வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். அப்போது, ‘அவர்தான் தோல்வியடைந்துவிட்டதாக கூறி சென்றுவிட்டார். அவரை எப்படி வெற்றிபெற்றதாக அறிவிக்கலாம்’ என கேட்டு ஜாய் வாக்குவாதம் செய்தார். அப்போது கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகை தந்தார். ஜாய் தரப்பு கலெக்டரிடம் கடிதம் அளித்து வாக்குகளை திருப்பி எண்ண கேட்டுக்கொண்டார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து இரு வேட்பாளர்கள் முன்னிலையில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அப்போது ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அமுதாவே வெற்றிபெற்றார்.

Tags : candidate ,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...