×

புத்தாண்டு தினத்தில் புதிய வாகனங்களை பதிவு செய்ய உடுமலையில் குவிந்த உரிமையாளர்கள்

உடுமலை,ஜன.3:உடுமலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு புதிய வாகனங்களை பதிவு செய்தல், புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் பெறுதல், வாகன பிட்னஸ் சான்றிதழ் (எப்சி) போன்றவை வழங்கப்படுகிறது. இதற்காக தினசரி வாகன ஓட்டுநர்கள் இங்கு வருகின்றனர். இந்நிலையில், புத்தாண்டையொட்டி புதிய வாகனங்களை வாங்கியவர்கள், அதை பதிவு செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் எலையமுத்தூர் சாலையில் சுமார் 2 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பெரும்பாலும் கார்கள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, இலகு ரக சரக்கு வாகனங்களில் பலரும் வந்திருந்தனர். 1-ம் தேதி மட்டும் 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...