×

மாடியிலிருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி

கோவை, ஜன.3: கோவை கவுண்டம்பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜோயல் நியூ பலின் பாலச்சந்தர்(45). தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் வேலைக்கு செல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் வீட்டின் முதல் மாடியில் கைப்பிடி சுவரில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்து அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயமடந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவருடைய உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : company ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...