×

வாலிபர் மீது தாக்குதல் 4 பேருக்கு வலை

கோவை, ஜன.3: கோவை சுண்டக்காமுத்தூர் ராமசெட்டிபாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின்  மகன் இளங்கோவன்(23). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், ராமன், மாரிமுத்து உட்பட 4 பேர் கொண்ட கும்பல் இளங்கோவனை வழிமறித்து பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் அந்த 4 பேரும் சேர்ந்து இளங்கோவனை தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும தேடி வருகின்றனர்.

Tags : Attack ,Plaintiffs ,
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது