×

வீட்டில் மயங்கி விழுந்து பெண் பரிதாப சாவு

புதுச்சேரி, ஜன. 3: புதுவையில் புத்தாண்டு தினத்தன்று வீட்டில் மயங்கி விழுந்து பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுவை, உருளையன்பேட்டை, செங்குந்தர் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). தனியார் ஏஜென்சியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயப்பிரியா (43). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபகாலமாக ஜெயப்பிரியா வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தாராம். இதையடுத்து மருத்துவரின் ஆலோசனையின்படி நோய்க்கு மருந்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ஜெயப்பிரியா திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த கணவர், உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஜெயப்பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





Tags : Woman mourning death ,home ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு