×

புதுச்சேரியில் 10ம் தேதி இபிஎப் குறைதீர் கூட்டம்

புதுச்சேரி, ஜன. 3:  புதுச்சேரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் `நிதி ஆப்கே நிகட்’ என்ற பெயரில் ஜனவரி மாத குறைதீர் கூட்டம் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் வம்சி கிருஷ்ண டின்டி தலைமையில் வரும் 10ம் தேதி (வெள்ளி) முதலியார்பேட்டை நூறடி ரோட்டில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்களுக்கும், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை தொழிலதிபர்களுக்கும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் இக்கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுகுறித்த விவரங்களுடன் தங்களது ெபயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யுஏஎன் நம்பர், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை வரும் 5ம் தேதிக்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்தவும் அல்லது மின்னஞ்சல் முகவரியான ro.puducherry@epfindia.gov.in -க்கு தெரியப்படுத்தவும். இத்தகவலை புதுச்சேரி உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் வம்சி கிருஷ்ண டின்டி தெரிவித்துள்ளார்.


Tags : EPF ,Grievance Meeting ,Puducherry ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...