×

தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை

வால்பாறை, ஜன.3: புத்தாண்டு தொடங்கியதை முன்னிட்டு வால்பாறை தோட்ட தொழிலாளர்களை தொழிற்சங்க தலைவர்கள் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர். வால்பாறை எடிபி. தொழிற்சங்க தலைவர் அமீது தோட்ட தொழிலாளர்களை பணியிடத்தில் சந்தித்து கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்து கூறி வருகிறார். இந்நிலையில் தொழிலாளர்கள் தினக்கூலியாக ரூ.312 வழக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் ரூ.5 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதை நடைமுறைபப்படுத்தவேண்டும் என தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் அமீதிடம் கோரிக்கைவிடுத்தனர்.

Tags : Plantation workers ,
× RELATED இலங்கையில் தேயிலை தோட்ட...