×

தன்னார்வலர்கள் மூலம் 3மரங்களுக்கு மறுவாழ்வு

பொள்ளாச்சி, ஜன. 3: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட டி.கோட்டாம்பட்டி ராஜேஸ்வரி நகரின் ஒரு பகுதியில் உள்ள தனியார் இடத்தில் சுமார் 15ஆண்டுகளுக்கு மேலாக மூன்று வேப்ப மரங்கள் இருந்தது. அந்த இடத்தில், கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த இடத்தில் இருந்த வேப்ப மரங்களை அப்புறப்படுத்தாமல், மறுவாழ்வு அளிக்க பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, ராஜராஜேஸ்வரி நகரில் இருந்த மூன்று வேப்பமரங்களையும், பொக்லைன் மற்றும் ராட்சத கிரேன் மூலம் வேறுடன் தோண்டப்பட்ட மரங்கள் அனைத்தும் நேற்று அப்பகுதியில் உள்ள நகராட்சி பூங்காவின் ஒரு பகுதியில், ஏற்கனவே தோண்டி தயார் நிலையில் இருந்த குழியில் இறக்கி நடப்பட்டது. இதனை பார்த்த அப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : volunteers ,
× RELATED அண்டாவை தூக்கிச் சென்ற பறக்கும்படை; பிரியாணி போச்சே தொண்டர்கள் புலம்பல்