×

ஒர்க்ஷாப் உரிமையாளருக்கு கத்திக்குத்து

கோவை, ஜன.3:பீளமேடு துளியம்மாள் லே-அவுட்டை சேர்ந்தவர் ஜோஸ். இவருடைய மகன் சபு(22). இவர் அதே பகுதியில் லேத் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருடைய பங்குதாரரான பரத்குமார் என்பவர் புத்தாண்டையொட்டி சபுவின் பைக்கை வெளியே சென்று வருவதற்கு கேட்டதாகவும், பைக்கை சபு தர மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த பரத்குமார் தன் நண்பர்கள் மது, குணா, அழகு கருப்புசாமி ஆகியோருடன் நேற்று முன்தினம் மசக்காளிபைாளையம் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சபுவை வழிமறித்த அவர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags : workshop owner ,
× RELATED கோவை அருகே பயங்கரம் ஒர்க்ஷாப் உரிமையாளர் கொலை