×

பெரியார், அண்ணா நினைவகம் சீரமைப்பு பணி

ஈரோடு, ஜன.3: ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார், அண்ணா நினைவகம் சீரமைப்பு பணி பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகில் பெரியார் வீதியில் தந்தை பெரியார் அண்ணா நினைவகம் அமைந்துள்ளது. இந்த நினைவகம் கடந்த 1975ம் ஆண்டு ஈ.வெ.ரா.மணியம்மை தலைமையில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பெரியார் அண்ணா நினைவகம், செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதன் கட்டிட பராமப்பு பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இந் நிலையில், பெரியார் அண்ணா நினைவகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. கட்டிடத்திற்கு மேற்கூரை, முன்பகுதி, மின்விளக்குகள் உள்ளிட்டவை சீரமைக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Periyar ,Anna ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...