×

பந்தலூர் அருகே கயமடைந்த கடமான் மீட்பு

பந்தலூர், ஜன. 3:  பந்தலூர் அருகே காலில் காயங்களுடன் சுற்றி வந்த கடமான் குட்டி மீட்கப்பட்டது. பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட குந்தலாடி அருகே ஓர்கடவு பகுதியில்  தனியார் தேயிலைத்தோட்டத்தில் நடக்க முடியாமல் கடமான் குட்டி இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பிதர்காடு வனச்சரகர் மனோகரன், வனகாப்பாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண் கடமான் குட்டியை மீட்டனர். அந்த குட்டிக்கு சுமார் 2வயது இருக்கும். கடமான் குட்டி தேயிலைத்தோட்டப்பகுதியில் பாய்ந்து செல்லும்போது காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டதில் நடந்து செல்லமுடியாமல் தேயிலைத்தோட்டத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. கூடலூர் கோட்டம் வன அலுவலர் உத்தரவு படி கடமான் குட்டிக்கு கால்நடை மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்து அதன் பின் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

Tags : Kaimana ,Bandalur ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா