×

ஜீப் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் வனத்துறை பெண் அதிகாரி பலி

பாலக்காடு, ஜன. 3: அட்டப்பாடி அருகே வனத்துறை ஜீப் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில், காயமடைந்து சிகிச்சைப் பெற்று வனத்துறை பெண் அதிகாரி உயிரிழந்தார். பாலக்காடு யாக்கரையை சேர்ந்தவர் ஷர்மிளா ஜெயராம் (32). அட்டப்பாடியை அடுத்த அகழியில் வனத்துறை ரேஞ்சராக பணியாற்றி வந்தார். கடந்த டிச.24ம் தேதி முக்காலி வனத்துறை அலுவலகத்திலிருந்து ஷர்மிளா ஜெயராம் மற்றும் டிரைவர் உபைத் (27) ஆகிய இருவரும் ஜீப்பில் அகழிக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக ஜீப் கட்டுப்பாட்டை இழந்து செம்மணூர் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் சுவர் இடிந்து ஜீப் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அபோது சாலையில் வந்தவர்கள் இருவரையும் மீட்டு மன்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் கடந்த டிச. 27ம் தேதி டிரைவர் உபைத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் ஷர்மிளா ஜெயராம் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து அகழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Forest officer ,accident ,Jeep River ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில்...