×

ஐசிஎப் ரயில்வே காலனியில் 22 சவரன் நகைகள் துணிகர கொள்ளை

சென்னை, ஜன. 3: சென்னைஐசிஎப், ரயில்வே காலனியில் வசிப்பவர் விஜி (48). ரயில்வே மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இவர், குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கேரளா சென்றார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் சென்னை திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 22 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து ஐசிஎப் போலீசில் விஜி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐசிஎப் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் குமார் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து 70 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : ICF Railway Colony ,
× RELATED தனியார் தொழிற்சாலையில் இருந்து...