×

மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேருக்கு வலை

சென்னை, ஜன. 3:அம்பத்தூர் தொழிற்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனை டிரைவர். இவர், அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு நோக்கி மாநகர பேருந்து பயணிகளுடன் புறப்பட்டது. டிரைவர் அம்பத்தூரை சேர்ந்த சுதாகர் (38) பேருந்து ஓட்டிச்சென்றார். இரவு 10 மணியளவில் கோயம்பேடு, ஜெய்நகர் பூங்கா அருகே பேருந்து வந்தபோது, பைக்கில் 2 பேர் பேருந்தை உரசுவது போல் சென்றனர்.

இதனை டிரைவர் சுதாகர் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த இருவரும், அங்கிருந்த கற்களை எடுத்து மாநகர பேருந்தின் மீது சரமாரியாக வீசிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றனர். இதில் பேருந்தின் முன்பக்க 2 கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. இதுகுறித்து கோயம்பேடு போலீசில் டிரைவர் சுதாகர் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...