×

பெண் தற்கொலை

ஈரோடு, ஜன.3: ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே கொம்மக்கோவில் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கவிதா (31). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். கார்த்திகேயன் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். கவிதாவிற்கு கடந்த 10 ஆண்டுகளாக மாதவிடாய் காலங்களில் தீராத வயிற்றுவலி இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 31ம் தேதி இரவு கவிதாவிற்கு திடீரென வயிற்றுவலி அதிகரித்தது. இதுகுறித்து தனது தாய் கருப்பாளுக்கு போன் செய்து வயிற்று வலி அதிகமாக இருப்பதாகவும், வீட்டிற்கு வருமாறும் அழைத்தார்.

ஆனால், இரவு பஸ் இல்லாததால் காலையில் வருவதாக கருப்பாள் கூறினார். நள்ளிரவில் கார்த்திகேயன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது கவிதா தூக்கில் தொங்கியபடி இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனடியாக கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கவிதாவை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கவிதா இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை