×

புழல் கால்பந்து போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு பரிசு

புழல், ஜன. 3: புழல், சிஎஸ்ஐ ஆண்கள் ஐக்கியம் சபை சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, புழல் விளையாட்டு திடலில் கால்பந்து போட்டி மற்றும் நலிந்தோருக்கு வேட்டி, சேலை வழங்கும் விழா நடைபெற்றது.விழாவுக்கு சிஎஸ்ஐ ஆண்கள் ஐக்கியம் சபை பொறுப்பாளர் இம்மானுவேல் பொன்னுசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அந்தோணி ஜோசப், சார்லஸ் காமராஜ் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு சிறைத்துறை தலைமையிடத்து துணை தலைவர் கனகராஜ், காவல்துறை துணை ஆணையர் ஜான்சுந்தர், தொழிலதிபர்கள் வரதராஜன், இன்பராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது. அப்போது போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் அணியினருக்கு பரிசு வழங்கப்பட்டன. நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த 500 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.

Tags : team ,football match ,
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...