×

பல்லாவரம் அருகே புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் மோதல்: ஒருவர் கைது

பல்லாவரம், ஜன.3:  பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் கடந்த 31ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அனகாபுத்தூர், அண்ணாநகர், 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (38). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். புத்தாண்டையொட்டி கடந்த 31ம் தேதி இரவு தனது வீட்டின் அருகே சந்திரசேகர் கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜூ என்பவர், குடிபோதையில் தன்னுடன் நடனம் ஆடும்படி சந்திரசேகரை அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜூ, வீட்டில் இருந்த பிளேடை எடுத்து வந்து சந்திரசேகரின் உடலில் சரமாரியாக கிழித்தார்.இதில் காயமடைந்த அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும் இதுகுறித்து சங்கர் நகர் போலீசில் புகார் அளித்தனா். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜூவை கைது செய்தனர். பின்னர் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : New Year ,celebration ,Pallavaram ,
× RELATED துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன்...