×

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்

பல்லாவரம், ஜன.3: அனகாபுத்துார், அண்ணாநகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (38). தனியார் நிறுவன ஊழியர். புத்தாண்டையொட்டி கடந்த 31ம் தேதி இரவு தனது வீட்டின் அருகே சந்திரசேகர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜூ என்பவர், சந்திரசேகருடன் தகராறில் ஏற்பட்டு அவரை பிளேடால் சரமாரியாக கிழித்தார்.  அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சங்கர் நகர்  போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர்.

Tags : Conflict ,New Year's Eve ,
× RELATED மனித – விலங்கு மோதல் தடுக்க சிறப்புப் படை: அன்புமணி வலியுறுத்தல்