×

சாலையோர கால்வாயில் பைக் விழுந்து கிண்டி ஆளுநர் மாளிகை பாதுகாப்பு அதிகாரி பலி

புழல், ஜன. 3: புழல் சூரப்பட்டு, மாதனாங்குப்பம் அருகே சாலையோர கால்வாயில் பைக் விழுந்ததில் சென்னை கிண்டி ராஜ்பவனில் பணியாற்றி வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி கமிஷனர் பரிதாபமாக உயிரிழந்தார். புழல் அருகே சூரப்பட்டு, விக்னேஸ்வர் நகரை சேர்ந்தவர் சரவணராஜ் (53). இவருக்கு தமிழரசி (43) என்ற மனைவியும், மகள் மாளவிகா (13), மகன் சிபி (11) ஆகியோரும் உள்ளனர். சரவணராஜ், சென்னை கிண்டி ராஜ்பவனில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி கமிஷனராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சரவணராஜ் வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். சூரப்பட்டு, மாதனாங்குப்பம் அருகே வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சரவணராஜ் நிலை தடுமாறி, பைக்கில் இருந்து அருகிலுள்ள சாலையோர கால்வாயில் தவறி விழுந்தார். இதனால் கால்வாய் நீரில் சரவணராஜ் மூச்சு திணறி பலியானார். நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் போலீஸ் உடையில் கால்வாய்க்குள் ஒருவர் இறந்திருப்பது பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சரவணராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : governor ,Kindi ,house security officer ,
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...