×

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி ஆன்மிக வேள்வி

மயிலாடுதுறைடிச.31: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைத்திட வேண்டும் என்று மயிலாடுதுறை உள்கேணி ஆதி பாராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் சிறப்பு கூட்டு வழிபாடு நடத்தினர். இதில் சுமார் 200செவ்வாடை அணிந்த பெண்கள் பங்கேற்றார்கள். மேலும் அனைத்து பெண்களும் தங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வருக்கு தபால் அட்டையில் எழுதிடும் உன் பணியையும் மேற்கொண்டார்கள். இந்த மாபெரும் கோரிக்கை ஆன்மீக வேள்விக்கு உள்கேணி ஓம் சக்தி வார வழிபாட்டு மன்ற தலைவர் கவிஞர் கங்கை ஆறுமுகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஜெகவீரபாண்டியன் அவர்கள் பங்கேற்று நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

அதோடு மன்ற பெண்கள் முதல்வருக்கு எழுதிய கடிதங்களை பெற்று கொண்டார்கள். கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு பிரிவு மக்களை நேரில் சந்தித்து குறிப்பாக கல்லூரி பள்ளிக்கல்வி மாணவர்கள் மாணவிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், கிராமப்புற மக்கள். மீனவர்கள் நேரில் சந்தித்து முதல்வருக்கு அனுப்பிட தபால் அட்டைகளை நேரில் பெற்றுக் கொண்டுள்ள நிலையில் தற்போது ஆன்மீகவழியில் பிரசித்தி பெற்ற ஓம் சக்தி ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற பெண்களிடம் பெற்றோம் என்றார்.

Tags : Medical College ,Mayiladuthurai ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...